கஜா புயலின் நடவடிக்கை

தயார் நிலையில் மின்வாரியம்: புயல் கரையைக் கடப்பதற்கு முன் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகத்தை மின்வாரியம் நிறுத்தியது. பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தன. தடைப்பட்ட மின்சாரத்தை உடனடியாக விநியோகம் செய்வதற்கான போர்க்கால நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலைமைப் பொறியாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்பணிகளைக் கண்காணிப்பதற்காக மின்வாரிய இயக்குநர் (மின் தொடரமைப்பு) சிறப்பு அலுவலராக நாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார்.
வானொலி பண்பலை சேவை: புயல் தொடர்பான செய்திகள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை அகில இந்திய வானொலியின் பண்பலை யில் ஒலிபரப்பு செய்யப்பட்டதாக அகில இந்திய வானொலி செய்திப் பிரிவு இயக்குநர் வி.பழனிச்சாமி தெரிவித்தார்.
போக்குவரத்து நிறுத்தம்: கஜா புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்கள் அனைத்திலும் இரவு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வருவாய்த் துறை அறிவுறுத்தியதை அடுத்து அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கத் தேவையான நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை
கஜா புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. கஜா புயல் கரையைக் கடக்கும் போது மேற்கண்ட பகுதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை