Posts

Showing posts from November, 2018

இப்படித்தான் புயல் உருவாகிறதா?

Image
நன்றி

29.11.2018 பள்ளி காலை வழிபாட்டு செயல்கள்

Image
திருக்குறள் வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. விளக்கம் 1: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். விளக்கம் 2: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம். English Couplet 11: The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives Couplet Explanation: By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia Transliteration(Tamil to English): Vaanin Rulagam Vazhangi Varudhalaal Thaanamizhdham aendruNaraR Paatru பழமொழி 1. பழமொழி/Pazhamozhi உப்பிட்டவரை உள்ளளவும் நினை. பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. Transliteration Uppittavarai ullalavum ninai. இன்றைய சிந்ததனை இன்றைய அறிவியல் துளிகள் தமிழில் செய்திகள் ஆங்கிலத்தில் செய்திகள்

256 வயதான நபர் மரணப்படுக்கையில் கூறிய இரகசியம்.!

Image
லீ சிங் யூன் என்ற நபர் சீனாவில் 1677 ஆம் ஆண்டு பிறந்தார் என்கிறது அவரது நண்பரும், இந்த வரலாற்றை நமக்கு கூறுபவருமான குறிப்பிட்ட ஒரு நபர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு வழங்கிய அந்த ஆவணம். மே 6, 1933 அன்று மிக பிரபல பத்திரிக்கை ஒன்று, விரிவான ஆராய்ச்சிக்கு பின்னர், இந்த கதையின் கதாநாயகனின் இறப்பிற்கு பிறகு, முதன்முதலாக உலகின் மிக வயதாக நபரைப் பற்றி பேசுகிறது. அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த இந்த நபர், மூலிகைகளை ஆய்வு செய்யவும், தியானம் செய்யவும், உடலை இயக்கத்திலேயே வைத்திருக்கவும் தனது வாழ்க்கையையே அர்பணித்தவர். இவர் ஒரு வைத்தியர், இயற்கை ஆர்வலர்,உணவுமுறை வல்லுநர் மற்றும் இராணுவ தந்திரர். குழந்தைபருவம் முதலே தற்காப்பு கலைகளை கற்ற யூன், சிறப்பு மூலிகைகளுக்கு பெயர்பெற்ற பகுதிகள் முழுவதும் பயணம் செய்து, அவற்றின் மருத்துவ குணங்களை கண்டறிந்தார். அவருக்கு 10 வயது இருக்கும்போதே, இடைவிடாத ஆராய்ச்சியின் காரணமாக மிகப்பெரிய மருந்தகத்தை வைத்திருந்தார். தனது 70 வயதில் இராணுவத்தில் சேர்ந்த யூன், தற்காப்பு கலை ஆசிரியராகவும், தந்திர ஆலோசகராகவும் விளங்கினார். அவரது 90வது வயதிலும் கூட ஒரு சுறு

நற்பண்பு நன்மையேத் தரும் - தினம் ஒரு ஸென் கதை

Image
ஸென் துறவி ஹாகுய்ன் தன் இளவயதில் நடந்த கதையாக அடிக்கடி தன்னுடைய மாணவர்களுக்கு கூறும் கதையே இன்றைய ஸென் கதையாகும். மனதில் வெறுமை நிலையை அடைவதற்காக ஸென் துறவிகள் தியானம் புரிவது வழக்கம். உள்ளுணர்வுகளின் மனக்கற்பனைகளை அழித்து புலனுணர்வுகளால் தூண்டப் படாத உண்மையான மெய்ஞானத்தினை அடைவதே ஸென் தியானத்தின் நோக்கமாகும். வாலிபனாக இருந்த போது ஸென் ஆசிரியர்களை சந்திப்பதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஹாகுயன் செல்வது வழக்கம். ஒரு சமயம் ஹாகுயன் மற்ற இரண்டு புத்தத் துறவிகளுடன் மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அதில் ஒரு துறவியானவர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் களைப்படைந்து சோர்வடைந்திருந்தார். அவர் தன்னுடைய தோலில் தொங்கிய பயண மூட்டையையும் ஹாகுயினை எடுத்துக் கொண்டு வருமாறு வருந்தி வேண்டிக் கேட்டுக் கொண்டார். வாலிபனான ஹாகுய்ன் உடனே வேண்டுகோளை ஏற்று அவருடைய மூட்டையையும் தானே எடுத்துக் கொண்டார். மனதினை வெறுமையில் ஒரு முகப் படுத்தி இன்னொரு மூட்டை இருப்பதாகவே எண்ணிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர்களுடன் வந்து கொண்டிருந்த மற்றொரு துறவி ஹாகுயினுடைய வாலிபப் பருவத்தினைய

தினம் ஒரு கதை - கண்ணாடி

Image
ஸென் துறவி ஒருவர், தான் செல்லும் இடம் அனைத்திற்கும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினைக் கூடவே எடுத்துச் சென்றார். மடாதிபதியாக இருந்த ஒருவர், துறவியின் இந்தச் செயலைப் பார்த்தார். தனக்குள், "துறவியானவன் எதற்காகத் தன்னுடைய புற அழகைப் பற்றி கவலைப் படவேண்டும். அக அழகே சாதுக்களுக்கு அழகு. எந்த நேரமும் துறவியானவன் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே இருந்தால் எப்பொழுது அஞ்ஞானத்தை விலக்குவது, எப்பொழுது ஞானத்தை அடைவது?" என்று மனதினில் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். துறவியின் செயலில் இருந்தக் குற்றத்தினை சுட்டிக்காட்டித் தெளிவிக்க எண்ணிய மடாதிபதி, துறவியிடம் சென்று "எதற்காக எப்பொழுதும் அந்தக் கண்ணாடியினை உன்னுடன் எடுத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். உடனேத் துறவி தன்னுடைய கைப்பையிலிருந்த கண்ணாடியினை வெளியே எடுத்து மடாதிபதியின் முகத்திற்கு நேராகக் காட்டியவர், "எனக்கு எதாவது பிரச்சனைகள் வரும் போது இந்தக் கண்ணாடியினைப் பார்ப்பேன், அது என்னுடைய இன்னலுக்கான காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்" என்று கூறியவுடன் மடாதிப

இப்பொழுது நீங்கள் வாட்ஸ்அப் போலவே SMS நீங்கள் உங்களின் கம்பியூட்டர் அல்லது லேப்டப்ப்பில் பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்

Image
முன்பெல்லாம் SMS  பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது ஆனால்  இப்பொழுதோ  SMS அனுப்புவது  மிகவும் குறைந்துள்ளது எப்பொழுது  வாட்ஸ்அப்  வந்ததோ அப்பபொழுதிலிருந்து  இந்த  SMS  மெசேஜுக்கு  அனுப்புவதற்க்கு வேலை இல்லாமல் போகிவிட்டது  இப்பொழுது நாம்  மெசேஜ்  பேங்க்  மெசேஜ் மற்றும் OTB  போன்றவைக்கு நமக்கு SMS  மிகவும்  பயன்படுகிறது  அந்த வகையில்  பார்த்தல் SMS நமக்கு மிகவும் பயன்படுகிறது . நமக்கு  மிகவும் பயன்படும் SMS  கம்பியூட்டர்  மற்றும் லேப்டாப்பில் பார்த்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும்  இப்பொழுது நீங்கள் வாட்ஸ்அப் போலவே  SMS  நீங்கள் உங்களின் கம்பியூட்டர் அல்லது லேப்டப்ப்பில்  பார்ப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் இந்த  வசதியை  உங்கள் ஆண்ட்ராய்டு  வெப்சைட்டான  கூகுள் இந்த அம்சத்தை  வழங்குகிறது அது எப்படி என்று  பார்ப்போம் வாருங்கள் 1 ஆண்டிராய்டு போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் Google Message என்று டைப் செய்து ஆப்பை இன்ஸ்டால் செய்யவும். 2 அப்ளிகேஷனை திறந்த பிறகு வலது பக்கத்தில் மேலே உள்ள மூலையில் மூன்று புள்ளிகள்  இருக்கும்  அதை தொடவும். advertisements 3 அ

மூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்

Image
பிரையன் ஜான்சனுடைய கெர்னல் நிறுவனம் (Bryan Johnson's firm, Kernel), மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை (Brain Chip - Micro) உருவாக்கி வருகின்றது. இந்த‌ சிப்களை வைத்து மக்களை வேண்டுமென்றபோது நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் அனுமதிக்கும். பணக்காரர்களுக்கென்று மாத்திரம் ஒதுக்கப்படாமல், இந்த‌ சிப்கள் 'ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே அனைவரும்' பெறமுடியும் என‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார். மனித மருத்துவ பயன்பாட்டிற்காக‌, மூளையில் பொருத்தப்படும் சாதனங்களின் முன்மாதிரிகளை கர்னல் தற்போது செய்து வருகிறது. வலிப்பு நோயாளிகளுடன் சோதனைகள் நடத்தி நல்ல ஆரம்ப முடிவுகளை பெற்றுள்ளது.மேலும் இந்த‌ சிப்களை பொருத்தும் தொழில் நுட்பத்தினை வ‌ணிகமயமாக்கும் (Brain Chip Implant Technology) நோக்கத்துடன் முன்னோக்கி செல்ல உள்ளதாகவும் , ஆரோக்கியமான மக்களிடம் சென்றடையும் முன்னர் , அல்சைமர் (Alzheimer) போன்ற மூளைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களில் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு இந்த‌ சிப்கள் ப‌யன்படுத்தப்படுமென நம்புவதாக‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார்.

கீறல் விழுந்த குறுவட்டில் உள்ள தகவல்களை மீட்க

Image
கீறல் விழுந்த குறுவட்டில் உள்ள தகவல்களை மீட்க முக்கியமான ஆவணங்கள் கொண்ட டி.வி.டி அல்லது வி.சி.டி (DVD/ VCD) அதிகமான கீறல்களால் (scratches) அவைகளை மீட்டெடுக்க முடியாமல் போனதா? கவலை வேண்டாம். 'வாழைப்பழம்' அல்லது 'டூத்பேஸ்ட்'-ஐ, கீறல்களின்மேல் படத்தில் காட்டப்பட்டிருப ்பதை போல் கடிகார திசையில் (Clockwise) தடவி பிறகு சுத்தமான நீரில் கழுவினால் போதும். கீறல்கள் மாயமாய் போகும். செய்துதான் பாருங்களேன் !!!

தூக்கத்தை கண்காணிக்க புதிய சாதனம் உருவாக்கம

Image
தொழில்நுட்ப வளர்ச்சியானது உடல் ஆரோக்கியத்தில் அளப்பரிய பங்கு வகிப்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இவற்றின் வரிசையில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க பல்வேறு அப்பிளிக்கேஷன்கள், கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒருவரின் தூக்கத்தை கண்காணிக்கக்கூடிய Sense எனும் புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய இந்த கருவியானது ஒருவருடைய தூக்க மாதிரி, தூங்கும் சூழல் என்பவற்றினை துல்லியமாக அறிந்து நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கின்றது. அதாவது தூங்கும் சூழலிலுள்ள சத்தங்கள், வெளிச்சம், வெப்பநிலை, காற்றிலுள்ள ஈரப்பதம், துணிக்கைகள் என்பவற்றினை அறிந்து கொள்கின்றது. இந்த அளவீடுகளில் இருந்து குறித்த இடம் நிம்மதியாக தூங்குவதற்கு வசதியானதா என அறிந்து கொள்ள முடியும்.

வைரஸ் தாக்கிய பென்ட்ரைவ்- இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

Image
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம். இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள். 1) முதலில் பென

தவறுதலாக அழித்த வாட்ஸ்அப் பைல்களை மீட்பது எப்படி???

Image
கணினி உலகை பேஸ்புக் என்ற சமூக வலைத்தளம் ஆட்டிப்படைப்பதை போன்றே மொபைல் உலகை வாட்ஸ்அப் என்ற மென்பொருள் ஆட்டிப்படைகின்றது. இதன் அசுர வளர்ச்சியை பார்த்து ஆடிப்போன போஸ்புக் நிறுவனம் அதை விலைக்கு வாங்கி தன்னுடையதாக்கிகொண்டது. இதில் சாட்டிங், மெசேஜ், படங்கள், தகவல்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை எளிதாக அனுப்பமுடிவதால் இம்மென்பொருள் பலரையும் கவர்ந்துவிட்டது. நீங்கள் மொபைல் மாற்றும் போதோ அல்லது மெமரி கார்ட் மற்றும் போதோ ஏற்கனவே உபயோகப்படுத்தி வந்த வாட்ஸ்அப் தகவல்கள் காணமல் போய் இருக்கும். இல்லையென்றால் தவறுதலாக அழித்திருப்போம். எனவே அழிந்த வாட்ஸ்அப் பைல்களை எப்படி திரும்ப மீட்பது என பார்க்கலாம். 1. உங்கள் வாட்ஸ்அப் கணக்கை uninstall செய்துவிட்டு, அதே நம்பரில் புதிதாக வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யுங்கள். 2. இன்ஸ்டால் செய்த பிறகு வரும் Restore பட்டனை தேர்வு செய்யும் போது உங்கள் பழைய தகவல்கள் அனைத்தும் உங்கள் கணக்கில் இருக்கும். கவனிக்க வேண்டியவை: நீங்கள் Uninstall செய்யவதற்கு முன்பு தற்போது உள்ள தகவல்களை backup செய்யுங்கள். அதற்கு WhatsApp > Menu Bu

கூகுள் நிறுவனம் நடத்தும் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி; பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

Image
உலகம் முழுவதிலும் உள்ள 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான போட்டிக்கு டிசம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! முக்கியத்துவம்: பள்ளி மாணவர்களின் சமூக பிரச்சனைகள் சார்ந்த அறிவை விரிவுபடுத்தி, அந்த பிரச்சனைகள் குறித்து அவர்களுக்குள் எழும் கேள்விகளுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம், அவர்களையே விடை தேட வைக்கும் ஒரு முயற்சியே இந்த போட்டி. சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், ரோபடிக்ஸ், விண்வெளி, சுகாதாரம், சமுதாயம், உணவு, பயணம், ஆற்றல் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் ஆகிய பத்து பிரிவுகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தேடுத்து தங்களது ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ளலாம். தனி நபராகவோ அல்லது இரண்டு முதல் மூன்று நபர்களைக் கொண்ட குழுவாகவோ இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரது அனுமதி அவசியம். பரிசுகள்: * உலகளவில் முதல் இடம் பெறும் மாணவருக்கு ‘கிராண்ட் பிரைஸ்’ ஆக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சத்து 69 ஆயிரம்)

Tamil income tax software 2018-2019 Thanks to விஸ்வநாத், உடற்கல்வி ஆசிரியர்.

https://drive.google.com/file/d/1L0jo1UkLok5BwS7G9-6rgmyZza74imkf/view?usp=drivesdk

தென்கச்சி கோ.சுவாமி நாதன் நகைச்சுவை சிந்தனை APP

Image
Indru Oru Thagaval By Thenkachi Ko. Swaminathan Part-1 நாளைய மாற்றத்துடன் Download Link கீழே https://play.google.com/store/apps/details?id=com.koodal.thenkatchi&hl=en_IN&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Dthenkatchi+swaminathan+play+store+app&pcampaignid=APPU_1_1v34W-LRE4rYvgTRxoaIDw

emergency phone charger செய்வது எப்படி? guide Video

https://m.youtube.com/watch?v=sz_dt8It4b4

எளிய Phone Charger

https://m.youtube.com/watch?v=g3oXvy0J4PE&t=147s

தினம் ஒரு தன்னம்பிக்கை கதைகள்

Image
தன்னம்பிக்கை கதைகள் மனக்கவலை ============= குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்.  அப்போது ஒரு சீடன், ‘குருவே! சில நேரங்களில் மனதில் எழும் மனக்கவலையை எப்படி களைவது?’ என்று கேட்டான். அவனைப் பார்த்த குரு, ‘இதற்கான பதிலை ஒரு கதையின் வாயிலாக உங்களுக்கு உணர்த்துகிறேன்’ என்றபடி கதையைத் தொடர்ந்தார். அந்தக் காட்டில் குரங்குகள் பல, கூட்டமாக இருந்தன. அவற்றில் சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிக் குரங்கும் உண்டு. ஒரு நாள் அந்தக் குட்டிக்குரங்கு, தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பாம்பு ஒன்றைக் கண்டது. நெளிந்து, வளைந்து சென்ற அந்தப் பாம்பைக் கண்டதும், அதற்கு குதூகலமாக இருந்தது. அது ஒரு பெரிய நச்சுப் பாம்பு. குட்டிக் குரங்கானது, மெதுவாகப் போய் அந்தப் பாம்பை தன் கையில் பிடித்து விட்டது. பிடிபட்ட பாம்பு, குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குட்டிக் குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. இதைப் பார்த்து குரங்குகள் அனைத்தும் அங்கே கூடிவிட்டன. ஆனால் எந்தக் குரங்கும், குட்டிக்கு உதவ முன்வரவில்லை. ‘ஐயய்யோ.. இது பயங்கரமான விஷமுள்

நாளைய சிந்தனை

Image

மற்ற இணையத்திற்கு நன்றிகள் பல

Image
Pums அத்தாணி தேடித் தந்து வெளியிட்ட புயல் வெள்ள அபாய எச்சரிக்கை App கீழ்க்கண்ட இணையத்தில் இன்று வெளியிட்டன. அவர்களுக்கு அத்தாணி பள்ளியின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். http://kalvisiraguplus.blogspot.com/2018/11/app.html?m=1 http://www.kalvinews.com/2018/11/app.html http://www.asiriyar.net/2018/11/app_22.html http://www.thamizhkadal.com/2018/11/app_22.html?m=1 https://kaninikkalvi.blogspot.com/2018/11/app_22.html

வந்தாச்சு புயல் வெள்ளம் மழை எச்சரிக்கை APP தமிழில்

Image
புயல் மழை வெள்ளம் பற்றிய முன் எச்சரிக்கை செய்யும் சூப்பரான Android App வந்தாச்சு தமிழில் இனி கவலை இல்லை நாளைய மாற்றத்்துடன் Download Link கீழே https://play.google.com/store/apps/details?id=com.vasithwam.apps.tamilnaduraindetails&hl=en_US&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Dtamilnadu+rain+fall+details+app+fee&pcampaignid=APPU_1_ZDn0W6yTO9DvrQGJ8LfgCw

how to improve Reading Skill Video

Image
https://youtu.be/y7ghLmcMsMY

விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்

கஜா புயல் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை   விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை ஈரோடு மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை கரூர் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை திண்டுக்கல்   மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை திருப்பூர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை திருச்சி  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை விருதுநகர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை தூத்துக்குடி மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை சேலம்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை மதுரை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை தேனி  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை அரியலூர்  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை சிவகங்கை  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை திருவாரூர் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை ராமநாதபுரம் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை நாகை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை கடலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை பெரம்பலூர் மாவட்டம் - தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம். புதுச்சேரி , காரைக்கால் மாவட்ட

கஜா இனி எதிர்க் காற்று வீசும்

Image
கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் எப்போது கரையை கடக்கும் என ஏக எதிர்பார்ப்புக்கும், அச்சத்துக்கும் மத்தியில், நள்ளிரவு 12 மணியளவில் நாகை வேதாரண்யம் இடையே அது கரையை கடக்கத் தொடங்கியது. புயலின் முன் பகுதி கரையை தொடங்கிய அந்த நேரத்தில் நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆனால், வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் கஜா புயலின் கண்பகுதியில் முதல் பகுதி கரையை கடந்தது. அதன்பின்னர் காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பால பகுதிகளில் சூறைக்காற்றினால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதேபோல் மின்கம்பங்களும் புயல் காற்றினால் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. இதனால் 6 மாவட்டங்களிலும் பெர

கஜா புயலின் நடவடிக்கை

தயார் நிலையில் மின்வாரியம்: புயல் கரையைக் கடப்பதற்கு முன் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகத்தை மின்வாரியம் நிறுத்தியது. பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தன. தடைப்பட்ட மின்சாரத்தை உடனடியாக விநியோகம் செய்வதற்கான போர்க்கால நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலைமைப் பொறியாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்பணிகளைக் கண்காணிப்பதற்காக மின்வாரிய இயக்குநர் (மின் தொடரமைப்பு) சிறப்பு அலுவலராக நாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார். வானொலி பண்பலை சேவை: புயல் தொடர்பான செய்திகள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை அகில இந்திய வானொலியின் பண்பலை யில் ஒலிபரப்பு செய்யப்பட்டதாக அகில இந்திய வானொலி செய்திப் பிரிவு இயக்குநர் வி.பழனிச்சாமி தெரிவித்தார். போக்குவரத்து நிறுத்தம்: கஜா புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்கள் அனைத்திலும் இரவு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வருவாய்த் துறை அறிவுறுத்தியதை அடுத்

கரையைக் கடக்கத் தொடங்கியது கஜா

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்தது. தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11-ஆம் தேதி உருவெடுத்தது. இப்புயல் வியாழக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 10 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி, ராமேசுவரம், தூத்துக்குடி துறைமுகங்களில் 8-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி, காரைக்காலில் 9-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும்

அறந்தாங்கியில் புயல் காற்று

அறந்தாங்கியில் கஜா புயலின் தாக்குதலால் நேற்று இரவு முதல் மழையுடன் அதிவேக தீவிர புயல் காற்று வீசி வருகிறது. புயலின் தன்மை கருதி வதந்திகளை நம்பாமல் அதே நேரத்தில் அலட்சியம் வேண்டாம். ஏன் என்றால் புயல் கரையை கடந்த பின்புதான் அந்த இடத்தில் காற்று இல்லாமல் வெற்றிடம் உருவாகும் அந்த வெற்றிடத்தை நிரப்ப பலமான எதிர்க் காற்று வீசும் அப்போதுதான் காற்று இன்னும் அதிகமாகும். வதந்திகளை நம்பாதீர்கள். ஆலோசனைக்கு : 967739 1458 நாளைய மாற்றத்துடன் Video link கீழே https://m.youtube.com/watch?v=12_1xSEVMh0

மாணவர்களுக்கான Topgrade Amazing quiz App(வினாடி-வினா ) Super App

Image
ஆசிரியர் மட்டுமின்றி மாணவர்களும் எளிதாக தங்கள் பாடத்திதிற்குத் தேவையான வினாடி-வினா வை உருவாக்கும் Amazing App .மற்ற quiz Maker போன்று இல்லாமல் நாளைய மாற்றத்துடன் புதுமையான Topgrade quiz maker Download Link கீழே நாளைய மாற்றத்துடன் https://m.apkpure.com/topgrade-quiz-maker/com.revisionquizmaker.revisionquizmaker/download?from=details

பின்னம் கற்பிக்கும் மாணவி

Image
Click Here Link to Download or Play https://youtu.be/Gw38R9Tf3cg

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Image