விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரை - 12,000 part-time teachers in need – Featured Article


சேலம், தருமபுரி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருச்சி,திருத்தணி, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை கொடுத்தோம். ஆனால் இன்றுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் கோரிக்கையை முதல்வர் படிப்பதில்லையா என்று ஏங்கும் நிலை எழுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், தருமபுரி, கடலூர், திருச்சி என பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடந்த முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. அதிலும் முதல்வரின் கவனத்தை ஈர்க்க பணி நிரந்தரம் கோரிக்கை மனுக்களை கொடுத்தோம். அதிலும் முன்னேற்றம் கிடைக்கவில்லை.

📚தற்போதுவரை பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தையே வாங்கி வருகிறோம்.

இந்த 11 ஆண்டில் இறந்து போனவர்கள், ஓய்வு பெற்றவர்கள் போக எஞ்சியுள்ள 12ஆயிரம் பேர் மட்டுமே இப்போது பணிபுரிகிறோம். எங்களுக்கு வயதாகி கொண்டே போகிறது. இன்றே நிரந்தரம் செய்தாலும் சில காலம் தான் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். எனவே இனியும் தாமதம் செய்ய வேண்டாம். இந்த 12ஆயிரம் குடும்பம் வாழ, முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

📚எங்களுக்கு விடியல் கிடைக்குமா?

பள்ளிக்கல்வி துறையிலே எங்களுக்கு பிறகு வேலையில் சேர்ந்த 5ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். அதுபோல காவல்துறையில் சிறப்பு இளைஞர் படையினர் 10 ஆயிரம் பேர் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். அதுபோல எஸ்மா – டெஸ்மாவின் போது தற்காலிமாக நியமித்த பணியாளர்கள் அனைவரும், பின்னர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். கலைஞர் ஆட்சியிலே 50 ஆயிரம் ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். நாங்கள் மட்டுமே இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் தவிக்கின்றோம். எங்களை கைதூக்கி விடுங்கள். நாங்களும் வாழ வழி கொடுங்கள். விடியல் நாயகனே, விடியல் தாருங்கள்.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை