வெற்றி நிச்சயம் தொடர் 1

வெற்றி என்பது எண்ணத்தை பொறுத்து அமைகிறது”.

என்பது மாவீரன் நெப்போலியன் வாக்கு ஆகும்.

ஒருவரது வெற்றிக்கு பலர் துணையாக நின்றாலும், அவரது எண்ணங்களும், செயல்களும் தான் அவரின் வெற்றிக்கு பெருமளவில் பக்கபலமாக அமைகிறது. இதனால் ஒருவரது எண்ணங்களையும், செயல்களையும் சீராக்கி நெறிப்படுத்த இளம்வயதிலேயே பழகிக்கொள்வது அவசியமாகும்.

நல்ல எண்ணங்களை இளம்வயதில் உருவாக்க விரும்புபவர்கள் தங்கள் “வாழ்வின் குறிக்கோள்” (Life Goal) எனப்படும் நோக்கத்தை முதலிலேயே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வெற்றியுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு வாழ்க்கை முழுவதும் எந்தத் தொழிலில் அல்லது வேலையில் ஈடுபட வேண்டும் என்பதைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு எதிர்காலத்தில் தான் ஒரு வழக்கறிஞராக மாறவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்னும்சிலர் தொழிலதிபராக மாற விரும்புவார்கள். வேறுசிலர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட அதிக விருப்பமுடன் இருப்பார்கள். எதிர்காலத்தில் கூலி தொழிலாளியாக இருந்தால்போதும் என்றுகூட சிலர் எண்ணுவது உண்டு. டாக்டராகி மருத்துவ சேவை புரியவும் சிலருக்கு ஆசை இருக்கும். விஞ்ஞானி ஆகி புதியபுதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்த சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்றும் சிலர் விரும்புவது உண்டு. அரசியல்வாதியாக வலம் வரவும் ஆர்வம் அதிகமாகக் கொண்டவர்களும் உண்டு. இப்படி, ஏதேனும் ஒரு துறையில் ஈடுபட்டு வெற்றிபெற ஒவ்வொருவருக்கும் ஆசைகள் இருப்பதுண்டு.

பொறியியல், மருத்துவம், சட்டம், கம்ப்யூட்டர், வேளாண்மை, உடற்கல்வி, ஆடிட்டிங், ஆசிரியர் பணி போன்ற துறைகளில் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்த பின்பு அந்தத் துறையில் வெற்றிபெற்று, சிறந்து விளங்குவது எப்படி? என்பது பற்றிய எண்ணத்தை நாள்தோறும் வளர்த்துக் கொண்டே வரவேண்டும்.

“மூட்டை தூக்குவதை வேலையாகக் கொண்டிருந்தாலும், அந்த வேலையில் சிறந்து விளங்கி ‘சிறந்த மூட்டை தூக்குபவராக’ மாறுவது எப்படி?” என்பது பற்றி சிந்தித்து தகுதிகளையும், திறமைகளையும் வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் தேர்ந்தெடுத்தத் துறையில் தெளிவான சிந்தனையையும் சிறப்பான வெற்றியையும் பெற இஸ்லும்.

வாழ்க்கையில் குறிக்கோளை நிர்ணயித்த பின்புதான் அதனை பற்றிய எண்ணங்கள் அதிகமாகும். “எந்தத் துறையில் வெற்றி பெறவேண்டும்?” என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த துறைசார்ந்த நல்ல மனிதர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், அந்த துறைசார்ந்த நண்பர்களிடம் நீங்கள் தேர்ந்தெடுத்த துறை பற்றி அடிக்கடி கலந்துரையாடி, அந்தத் துறையை பற்றிய அதிக தகவல்களையும் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் அல்லது நோக்கத்தை அடைவதற்குத் தேவையான திறன்கள் (Skills) உங்களிடம் இருக்கிறதா? என்பதையும் மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். குறிக்கோளை அடைவதற்குத் தேவையான திறன்கள் இல்லையென்றால் அந்த திறன்களை பெறுவதற்கான வழிமுறைகளையும் கண்டறிந்து அதனை பெற ஆர்வமுடன் செயல்பட வேண்டும்.

நல்ல நம்பிக்கையோடுகூடிய தன்னம்பிக்கைக் கொண்டவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சாதனை படைக்கிறார்கள். இவர்கள்தான் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்தத் துறையில் முன்னேறியவர்களைப் பார்க்கும் போதெல்லாம் “சாதாரண நிலையிலிருந்த இவர்கள் இப்படி பெரிய அளவில் புகழ்பெற்று விட்டார்களே!” என்று பொறாமைப்படுவதற்குப் பதிலாக, அவர்களது எந்தெந்த குணங்கள் அல்லது திறன்கள் அவர்களை வெற்றியை நோக்கி நகர வைத்தது என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

வெற்றி பெற்ற மனிதர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால், அவர்களது அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்குப் பாடங்களாக அமையும். எத்தனை விதமான வெற்றிகளையும், தோல்விகளையும் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகப் புரியும்.

“வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமாக அமைவார்கள்” என்பதை உணர்ந்து கொண்டால் இளைஞர்களுக்கும், முன்னேறத் துடிப்பவர்களுக்கும் பெரியவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டியாக அமையும்.

புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன், மின்சார பல்பை கண்டுபிடித்தவர். “’டங்ஸ்டன்’ என்னும் மெல்லிய இலையை பயன்படுத்தி மின்சார பல்பை ஒளிரச்செய்ய முடியும்” என்பதை உலகுக்கு உணர்த்திய அறிவியல் அறிஞர் இவர்தான். மின்சார பல்பை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஏராளமான பரிசோதனைகளை செய்தார் எடிசன். முதலில், கம்பிகளை இணைப்பதற்கு டங்ஸ்டனுக்குப்பதில் சின்னசின்ன கம்பிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். வேறு உலோகங்களாலான இலைகளையும் பயன்படுத்தினார். சுமார் 1000 முறை பல்வேறு சோதனைகள் செய்தபின்பும், அவரால் வெற்றிகாண முடியவில்லை. இருந்தபின்பும், முயற்சியைத் தளரவிடாம

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை