காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் ராணுவ மேஜர் வீர மரணம்

நேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 38 வீரர்கள் பலியான நிலையில், இன்று ரஜோரி பகுதியில் நடந்த தாக்குதலில் ராணுவ மேஜர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

காஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று முன்தினம் 78 வாகனங்களில் 2,500க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 38 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். புல்வாமா கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் காஷ்மீரில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே, ரஜோரி என்ற இடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ராணுவ மேஜர் ஒருவர் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதல் நடந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், இன்று ரஜோரி பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது நாட்டு மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை