பலத்த வரவேற்புடன் மணமேல்குடியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி

மணமேல்குடி   ஒன்றியத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி 
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும்  பயிற்சியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு அன்பழகன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பாடவாரியாக தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு மாணவர்கள் எளிதில் கற்பதற்கும்..
 ஊக்கப்படுத்துவதற்கும் பயிற்சியில் பாடவாரியாக வழங்கப்பட்டது.

இப்ப பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு விஸ்வநாதம் அவர்கள் கலந்து கொண்டார் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கருத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை