பட்டதாரி ஆசிரியர் 1,282 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்கப்படவில்லை
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 1,282 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.
ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் எந்தவித தாமதமும் இல்லாமல் ஊதியம் கிடைக்க அவர்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை நிரந்தரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) கடந்த 2000-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 10 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment